-
சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?காவற்கோபுரம்—1991 | மே 1
-
-
16. (எ) ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது? (பி) ஒரு மூப்பர் எவ்வாறு இச்சை அடக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம்?
16 ஜாக்கிரதையுள்ளவனும், இச்சையடக்கமுள்ளவனுமாய். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8) கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ஒரு மூப்பர் மிதமாக இருக்க வேண்டும். சோதனைகளை எதிர்ப்படும்போது சங்கீதக்காரன் ஜெபித்ததுபோல அவன் ஜெபித்தால் சமநிலையை காக்க கடவுள் அவனுக்கு உதவுவார்: “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” (சங்கீதம் 25:17) ஒரு கண்காணி கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கவும் அதன் கனிகளை, இச்சையடக்கம் உள்பட, பிரதிபலிக்கவும் வேண்டும். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சபைக்கு ஆவிக்குரிய வழிநடத்துதலை அளிக்கும்போது ஒரு மூப்பர் தீவிர நிலையைத் தவிர்க்க உதவுகிறது.
-
-
சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?காவற்கோபுரம்—1991 | மே 1
-
-
19. அந்நியரை உபசரிக்கிறவனாக இருப்பதால், ஒரு மூப்பர் என்ன செய்கிறார்?
19 உபசரிக்கிறவனுமாய். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8) ஒரு மூப்பர் “அந்நியரை உபசரிக்க நாடுகிறார்.” (ரோமர் 12:13; எபிரெயர் 13:2) “உபசரிக்கும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக “அந்நியர் மேல் அதிக அன்புள்ள” என்ற அர்த்தமுள்ளதாகும். ஆகவே உபசரிக்கும் தன்மையுடைய ஒரு மூப்பர் புதியவர்களை, பொருள் வசதி மிகுந்தவர்கள் மீது எப்படி அக்கறை காண்பிக்கிறாரோ அதே விதமாய் ஏழைகள் மீதும் காண்பித்து, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரவேற்கிறார். கிறிஸ்தவத்தின் நலன்களுக்காக பயணம் செய்கிறவர்களை அவர் உபசரிக்கிறார். மேலும், “தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி” அவர்களை அவர் வழியனுப்புகிறார். (3 யோவான் 5-8) உண்மையிலேயே, ஒரு மூப்பர் குறிப்பாக சகவிசுவாசிகளை அவர்கள் தேவைகளுக்கேற்ப அவருடைய சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உபசரிக்கிறார்.—யாக்கோபு 2:14-17.
-
-
சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?காவற்கோபுரம்—1991 | மே 1
-
-
23. (எ) “நல்லது மேல் பிரியமுள்ளவன்” என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்? (பி) நீதிமானாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
23 நல்லது மேல் பிரியமுள்ளவனும், நீதிமானும். (தீத்து 1:8) ஒரு மூப்பராக தகுதிபெற, ஒருவர் நல்லது மேல் பிரியமுள்ளவராயும் நீதிமானாயும் இருக்க வேண்டும். நல்லதை விரும்புகிறவர், யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ அதை விரும்புகிறார், தயவான அதிக உதவி அளிக்கும் வேலைகளைச் செய்கிறார், மேலும் மற்றவரின் நல்ல தன்மைகளைப் போற்றுகிறார். (லூக்கா 6:35; அப்போஸ்தலர் 9:36, 39-உடன் ஒப்பிட்டு பாருங்கள்; 1 தீமோத்தேயு 5:9, 10) நீதிமானாய் இருப்பது தேவனுடைய சட்டங்களுக்கும் தராதரங்களுக்கும் ஒத்திசைந்திருப்பதாகும். மற்ற காரியங்கள் போக, அப்படிப்பட்ட ஒரு மனிதர் பாரபட்சமற்றவராகவும், மனதில் நீதியான, நெறிமுறையான மற்றும் நன்மையான காரியங்களைக் கொண்டிருப்பார். (லூக்கா 1:6; பிலிப்பியர் 4:8, 9; யாக்கோபு 2:1-9) நல்லதை நாடுவது, நீதி தேவைப்படுத்துவதற்கும் அப்பால் செல்கிறது, இதில் நல்ல தன்மை நீதியிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஆகையால் நல்லதை நாடுபவர் அவரிடமிருந்து (நீதியானபடி) எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் அதிகமாக மற்றவருக்குச் செய்கிறார்.—மத்தேயு 20:4, 13-15; ரோமர் 5:7.
24. உண்மையுள்ளவனாக இருப்பது எதைத் தேவைப்படுத்துகிறது?
24 உண்மையுள்ளவனும். (தீத்து 1:8) மூப்பராக இருக்கத் தகுதிபெற்ற ஒரு மனிதர் தேவனிடமாக முறிக்கப்பட முடியாத பக்தியை காத்துக் கொள்கிறார், மேலும் தன் உத்தமத்தன்மை எவ்வகையில் சோதிக்கப்பட்டாலும் தேவ நீதியைப் பற்றியிருக்கிறார். அவரிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறாரோ அதைச் செய்கிறார், இது ஓர் உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபியாக சேவை செய்வதையும் உட்படுத்துகிறது.—மத்தேயு 24:14; லூக்கா 1:74, 75; அப்போஸ்தலர் 5:29; 1 தெசலோனிக்கேயர் 2:10.
-