-
உலகளாவிய அறிக்கை2007 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
-
-
சுவிட்சர்லாந்து
பன்னாட்டு மக்களின் சங்கமமாய்த் திகழும் ஜெனிவா நகரில், மரீ என்ற சகோதரி மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசினார். சகோதரி மரீ அரபிக் மொழியைக் கற்றுக்கொண்டிருந்ததால், அந்த மொழியில் அவரிடம் பேசினார். ஒரேயொரு உண்மைக் கடவுளையே தான் நம்புவதாக மரீ கூறினார். அப்படிச் சொன்னதும், அந்தப் பெண் மரீயைக் கட்டித்தழுவி முத்தமிட்டாள்; தான் கவலையாக இருந்ததாகவும் மரீ தன்னிடம் பேசிய சமயத்தில் தான் ஜெபம் செய்து கொண்டிருந்ததாகவும் சொன்னார். மறுநாள் தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவிருப்பதாக அந்தப் பெண் கூறினாள். மரீ பைபிளைத் திறந்து 1 பேதுரு 3:7-ஐ வாசித்து, பெண்களைக் கடவுள் உயர்வாகக் கருதுகிறார் என விளக்கினார். அதன் பிறகு, கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்று சொன்னார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண் இவ்வாறு கேட்டாள்: “நீங்கள் ஒரு பெண்ணா அல்லது தேவதையா? இந்த வசனத்தில் கடவுள் சொல்லியிருக்கிறபடி என் கணவர் நடந்துகொள்ளாததுதான் எனக்குப் பிரச்சினையே. எனக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபித்துக்கொண்டேயிருந்தேன். அதற்கேற்றமாதிரி நீங்கள் இந்தப் புத்தகத்தைத் திறந்து இந்த வசனத்தையே எனக்கு வாசித்துக் காட்டினீர்கள்.” அதன் பிறகு அந்த வசனத்தை ஒரு பேப்பரில் எழுதித் தரும்படி மரீயிடம் அவர் கேட்டார். அந்த பேப்பரை வீட்டிற்கு எடுத்துச் சென்று எல்லாருக்கும் காட்டி, இந்த அருமையான சந்திப்பைப் பற்றி அவர்களிடம் சொல்லப்போவதாக அவர் கூறினார். அந்தப் பெண் தன்னுடைய நாட்டுக்குச் செல்லவிருப்பதைக் குறித்து மரீ வருத்தப்பட்டார், என்றாலும் ஒருவருக்கொருவர் தவறாமல் தொடர்புகொள்ள ஒத்துக்கொண்டார்கள்.
-
-
உலகளாவிய அறிக்கை2007 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
-
-
மரீ
[பக்கம் 57-ன் படம்
-