உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
    ராஜ்ய ஊழியம்—1991 | ஜனவரி
    • வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்

      ஜனவரி 7 -13

      சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்

      1. முன்னுரையையும் வேத வசனங்களையும் விமர்சியுங்கள்.

      2. இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?

      ஜனவரி 14-20

      இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை உபயோகிக்கையில்

      1. பொருளடக்க அட்டவணையிலிருந்து எந்தப் பகுதிகளை அல்லது அதிகாரங்களை நீங்கள் சிறப்பித்துக் காண்பித்திருக்கிறீர்கள்?

      2. என்ன திட்டவட்டமான குறிப்புகளை அல்லது படங்களை நீங்கள் முக்கியப்படுத்திக் காண்பித்திருக்கிறீர்கள்?

      ஜனவரி 21 -27

      அக்கறையைத் தொடருதல்

      1. எவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மறுசந்திப்புச் செய்ய வேண்டும்?

      2. முதல் சந்திப்பில் பேசியவைகளோடு கூட்டும் விதத்தில் நீங்கள் என்ன சொல்லலாம்?

      3. அடுத்த சந்திப்பிற்காக நீங்கள் எவ்வாறு அடிப்படை போடலாம்?

      ஜனவரி 28 -பிப்ரவரி 3

      சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்

      1. தற்போதைய பேச்சுப் பொருளை விமர்சியுங்கள்.

      2. புதிய பிரசுர அளிப்பை நீங்கள் எவ்வாறு இணைப்பீர்கள்?

  • சபை புத்தகப் படிப்பு
    ராஜ்ய ஊழியம்—1991 | ஜனவரி
    • சபை புத்தகப் படிப்பு

      நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? என்றபுரோஷுரிலிருந்து நடைபெறும் சபை புத்தகப்படிப்பு அட்டவணை: (நம் ராஜ்ய ஊழியம் அக்டோபர் 1990 சேர்க்கையைப் பாருங்கள்.)

      ஜனவரி 14: ஐந்தாவது வாரம்

      ஜனவரி 21: ஆறாவது வாரம்

      ஜனவரி 28: ஏழாவது வாரம்

      பிப்ரவரி 3: எட்டாவது வாரம்

  • சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
    ராஜ்ய ஊழியம்—1991 | ஜனவரி
    • சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்

      இளைஞரின் பிரச்னைகளுக்குப் பதில்

      சங். 119:9—பைபிளின் நடைமுறையான வழிநடத்துதல்.

      நீதி. 1:8—பெற்றோர்களின் உத்தரவாதம்.

  • சஞ்சலத்தை தடுத்து விலக்கஇளைஞர்களுக்கு உதவுதல்
    ராஜ்ய ஊழியம்—1991 | ஜனவரி
    • சஞ்சலத்தை தடுத்து விலக்கஇளைஞர்களுக்கு உதவுதல்

      1 யெகோவா தம்முடைய மதிப்புமிக்க பரிசாகிய ஜீவனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக நம் இருதயத்தின் விருப்பங்களைத் தொடர அவர் நமக்கு ஓரளவு தனிப்பட்ட சுயாதீனத்தை அனுமதித்திருக்கிறார். ஆனால் செயல்படுவதற்கான அந்தச் சுயாதீனத்தோடுகூட, நாம் என்ன செய்கிறோமோ அதற்கு பொறுப்பாளிகளாக யெகோவா சரியாகவே நம்மை ஆக்குகிறார்.—பிர. 11:9.

      2 அபூரணரும் பாவிகளுமாயிருக்கிற நாம் நம் வாழ்க்கையை நடத்தும் விதத்தின் விளைவாக நம்மீது வரும் சஞ்சலத்தை எவ்வாறு தடுத்து விலக்க முடியும்? (பிர. 11:10) அனுபவமற்ற இளைஞர்களும்கூட சஞ்சலத்தைத் தவிர்ப்பது கூடிய காரியமாகுமா? சந்தோஷகரமாக நமக்கு பதில் ஆம் என்று இருக்கிறது. வழிநடத்துதலுக்கான நம் தேவையைக் குறித்து யெகோவா நன்கு அறிந்திருக்கிறார், இந்தக் கடைசி நாட்களை குறிப்பிட்டுக் காட்டும் பெருங்குவியலான இடர்ப்பாடுகளின் வழியாக பாதுகாப்பாக கடந்து செல்ல இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் உதவும் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அன்புடன் அவர் கொடுத்திருக்கிறார்.—சங். 19:7; 119:9; 2 தீமோ. 3:1.

      பெற்றோரின் உத்தரவாதம்

      3 கஷ்டங்கள் எழும்புகையில், ‘நெகிழ்ந்த கைகளையும் முழங்கால்களையும் திரும்ப நிமிர்த்தி முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தமாகும்படி’ செய்ய இளைஞர்களுக்கு உத்தரவாதமுள்ள பெற்றோர்கள் தேவைப்படுகின்றனர். (எபி. 12:12, 13) ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் தங்கள் பிள்ளைகளை வைப்பதற்கு உதவி செய்ய, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிந்தனையை அவ்வப்போது சரிசெய்ய வேண்டும். இதற்கு பொறுமையும், திறமையும், அதோடுகூட யெகோவாவின் திரளான ஆசீர்வாதங்களும் தேவைப்படுகிறது.

      4 கெட்ட செல்வாக்குகளிலிருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுவதுமாக தடுத்து காக்க முடியாது. ஆனால் எவ்வாறு ஒரு பிள்ளையின் மனதை வலிமைப்படுத்தலாம்? ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையில் அவனை வளர்ப்பதன் மூலமாக. (எபே. 6:4) இதில் மற்ற காரியங்களோடுகூட குடும்ப படிப்பு, ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான வழிநடத்துதல், பள்ளி முடிந்த பிறகு ஆரோக்கியமான வேலைகள், பொருத்தமான சிட்சை மற்றும் பெற்றோர்களின் நல்ல முன்மாதிரி ஆகியவை உட்பட்டிருக்கின்றன.

      5 ‘தேவ பக்தி’ மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்–பலன் தரும் விடைகள் என்ற புத்தகம் இளைஞர்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர் சரியான தராதரங்களைப் பற்றி தங்கள் பிள்ளைகளுடன் காரணம் காட்டி பேசவும் இது உதவுகிறது. கடவுளின் சட்டங்கள் ஒரு பிள்ளையின் மனதிலும், இருதயத்திலும் திறம்பட்டவிதமாய் படிப்படியாக அறிவுறுத்தப்பட்டால், இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் செல்வாக்காக செயல்படும். இந்தப் புதிய பிரசுரத்தில் உள்ள விஷயங்களின் பேரில் குடும்ப கலந்தாலோசிப்பு செய்வது சஞ்சலத்தை தடுத்து விலக்க இளைஞர்களை பலப்படுத்தும்.

      6 1989-ல் இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் வெளியிடப்பட்டபோது, மாநாட்டு பேச்சாளர் குழுமியிருந்த இளைஞர்களிடம் தன் கவனத்தைத் திருப்பி புத்தகத்தின் மதிப்பை சிறப்பித்துக்காட்டினார். குடும்ப கலந்தாலோசிப்பிற்கு ஓர் அடிப்படையாக அதை உபயோகிக்க பெற்றோர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், “கலந்துபேசுவதற்கான கேள்விகள்” என்றழைக்கப்படும் ஓர் அம்சம் காணப்படுகிறது. இந்தக் கேள்விகள் விஷயங்களை பாரா–பாராவாக ஆராய்வதற்கென அமைக்கப்பட்டில்லை. ஒவ்வொரு கேள்வியும் ஒன்று அல்லது அதற்குமதிகமான உபதலைப்புகளை உட்படுத்துகிறது. சில குடும்ப தலைவர்கள் முழு அதிகாரத்தையும் வாசித்த பின்னர் கேள்விகளை சிந்திக்க தேர்ந்தெடுக்கலாம். வேறு சிலர் ஒத்திசைவான உபதலைப்புகளின் கீழிருக்கும் விஷயங்களை வாசிக்கையில் இடையிடையே நிறுத்தி கேள்விகள் கேட்கலாம்.

      நம் பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுதல்

      7 நம் பிராந்தியத்தில் நாம் அநேக இளைஞர்களைக் காணலாம். அவர்களுக்கிருக்கும் சில கேள்விகள் இந்தப் புதிய புத்தகத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது, ஆகையால் ஜனவரி மாதத்தில் இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை வெளி ஊழியத்தில் நாம் சிறப்பித்துக் காட்டுவோம். ஒருவேளை நீங்கள் உபயோகிக்க விரும்பும் ஒரு பிரசங்கத்தை நீங்கள் ஏற்கெனவே தயாரித்திருப்பீர்கள். அல்லது நீங்கள் ஒருவேளை பின்வருபவற்றைப் போல சொல்ல விரும்பலாம்:

      8 “இளைமைப் பருவம் நம் வாழ்க்கையின் அதிக சந்தோஷமான காலப்பகுதி என்பதாக நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், விசனகரமாக, இன்று நாம் அநேக சந்தோஷமற்ற இளைஞர்களைக் காண்கிறோம். அப்படியில்லையா? (பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள்.) இளைஞர்களைப் பாதித்து அவர்களுடைய சந்தோஷத்தை எடுத்துப்போடும் அநேக பிரச்னைகளோடு உள்ள ஒரு குழப்பகரமான உலகை மாறிக்கொண்டே போகும் தராதரங்கள் உருவாக்கியிருக்கிறது. நம்பத்தக்க வழிநடத்துதலை அவர்கள் எங்கே காணலாம்? (குறிப்புக்காக அனுமதியுங்கள்.) சங்கீதம் 119:9-ல் பைபிள் என்ன சிபாரிசு செய்கிறது என்பதைக் கவனியுங்கள். (வாசியுங்கள்.) எது சரியானது என்பதைக் கற்பிப்பதில் பெற்றோர்களின் உத்தரவாதத்தைப் பைபிள் சிறப்பித்துக் காட்டுகிறது. பின்னர் நீதிமொழிகள் 1:8-ல் இந்தப் போதனையைக் கொடுக்கிறது. (வாசியுங்கள்.) இதற்கு இசைவாக, இளைஞர் கேட்கும் கேள்விகள்–பலன்தரும் விடைகள் புத்தகம் பைபிளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறையான வழிநடத்துதலினால் நிறைந்திருக்கிறது, தாங்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்காலத்தை எதிர்ப்படலாம், மேலும் அவ்வாறு செய்வதில் சந்தோஷமடையலாம் என்பதை இளைஞர்கள் காண அவர்களுக்கு உதவிசெய்ய அநேக உண்மை–வாழ்க்கை அனுபவங்களை அது கொண்டிருக்கிறது. (ஆர்வத்தைத் தூண்ட அநேக அதிகாரங்களின் தலைப்புகளை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.) இந்த உதவியான மற்றும் அழகிய படங்களாலான புத்தகத்தை நன்கொடையாக ரூ. 15-க்கு நீங்கள் அனுபவிக்கலாம்.”

      9 இளைஞர்கள் தங்கள் சக்திகளை ஞானமான, பயனுள்ள இலக்குகளை எட்ட உபயோகிக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிடுகிறது. அளவற்ற ஞானத்திற்கு ஊற்றுமூலமான பைபிளிடமாக இந்தப் புதிய புத்தகம் நிச்சயமாக அநேகரை வழிநடத்தும். இப்பொழுது ஒரு முழுமையான வாழ்க்கைக்கும், ஒரு பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் இளைஞர்களை வழிநடத்துவதற்கு என்னே ஒரு மதிப்பு வாய்ந்த கருவி!—பிர. 12:1.

  • அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்புகளை நடத்துதல்
    ராஜ்ய ஊழியம்—1991 | ஜனவரி
    • அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்புகளை நடத்துதல்

      1 பெற்றோர்கள் செய்யும் அதிமுக்கியமான வேலைகளில் ஒன்று தங்கள் பிள்ளைகளுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதாகும். இது யெகோவாவிடமிருந்து வந்த ஒரு கடமைப் பொறுப்பு. (உபா. 6:6, 7) தேவபக்தியற்ற ஓர் உலகில் நேர்மையாய் நடப்பதற்கு பிள்ளைகளுக்கு வழிநடத்துதலும் ஆலோசனையும் தேவைப்படுகிறது. யெகோவாவையும் சத்தியத்தையும் நேசிக்கவும், அதைப் பற்றியிருக்க தீர்மானமாயிருக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மார்ச் 1, 1989 (ஆங்கிலத்தில் ஆகஸ்ட் 1, 1988) காவற்கோபுரம் பக்கம் 11-ல் குறிப்பிட்டது: “உங்களுடைய மற்றெல்லா கடமைகளின் மத்தியிலும் அல்லது நீங்கள் எதிர்ப்படும் எல்லா துன்பங்கள் மத்தியிலும், பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கும் காரியத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் உங்கள் பிள்ளைகளின் இருதயத்தைப் பாதுகாத்து, அவர்களை சரியான பாதையில் துவக்கி வைக்கும் ஆவிக்குரிய மதிப்புகளை அவர்களில் ஆழமாகப் பதிய வைக்கச்செய்ய அனுமதிக்கும்.”

      2 கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதலைக் குடும்பங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்றால், குடும்ப படிப்பிற்காக நேரம் ஒழுங்காக ஒதுக்கி வைக்கவேண்டும். குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை கவனிப்பதற்கு குடும்பத் தலைவர்கள் முதலிடம் கொடுக்கத் தேவை இருக்கிறது. குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளுக்கு சரியான கவனிப்பு இப்பொழுது கொடுக்கப்படவில்லையென்றால், பெற்றோர்கள் எதிர்காலத்தில் வினைமையான பிரச்னைகளைக் கையாள வேண்டிய சாத்தியம் அதிகம் இருக்கிறது.

      படிப்பதற்கு விஷயங்களும் முறைகளும்

      3 எதைப் படிக்க வேண்டும்? குடும்பத்திற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிய குடும்பத் தலைவர் சிறந்த நிலையில் இருக்கிறார். நன்மை பயக்கக்கூடியவைகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விவரம் கேட்டு அவர்களுடைய ஆலோசனைகளையும் சிந்தித்துப் பார்க்கலாம். வளைந்து கொடுக்கும் தன்மை குடும்ப படிப்பை நடைமுறையானதாயும், கிளர்ச்சியூட்டுவதாயும் ஆக்கும். காவற்கோபுரம் வாராந்தர படிப்பை அநேக குடும்பங்கள் தயார் செய்ய தேர்ந்தெடுக்கின்றனர். என்றபோதிலும், சில சமயங்களில் பள்ளியில் இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளின் பேரில் திட்டவட்டமான விஷயங்களை கலந்தாலோசிப்பது தேவையானதாயிருக்கும். எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள், பாடதிட்டம் சாராத நடவடிக்கைகள், விளையாட்டு, ஒழுக்கயீனமான மனசாய்வுகள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பிரசுரிக்கப்பட்ட தகவல்களை கட்டியெழுப்பும், உற்சாகமூட்டும் விதத்தில் சிந்திக்கலாம். என்ன விஷயங்கள் குடும்பத்திற்கு தேவைப்படுகிறது என்பதையும், மேலும் எவ்வாறு அதைக்கொண்டு சிறந்த விதத்தில் அவர்களின் இருதயத்தை எட்டலாம் என்பதையும் குடும்பத் தலைவர் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்வது முக்கியமாயிருக்கிறது.—ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1971, பக்கங்கள் 105–6-ஐ பாருங்கள்.

      4 ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? ஓர் ஓய்வான அதே சமயத்தில் மரியாதைக்குரிய சூழ்நிலையை உருவாக்குங்கள். ஓர் இயந்திரத்தைப் போன்று அல்லது அளவுக்கு மீறி கண்டிப்புடன் நடத்தும் முறையை தவிருங்கள். கூடுதலான கேள்விகளைக் கேளுங்கள், சிந்தனையைத் தூண்ட உதாரணங்களை உபயோகியுங்கள். மேலும் எல்லாரும் ஈடுபடும்படிச் செய்யுங்கள். விஷயங்களை மதிப்பேற்றுவதற்கு வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற காட்சி விளக்க முறைகளை உபயோகிக்கலாம். பிள்ளைகளின் வயது மற்றும் திறமைகளுக்கு ஏற்றவாறு, அகர வரிசை அட்டவணை அல்லது உட்பார்வை ஏடுகளில் உள்ள விஷயங்களைக் கண்டுபிடிக்க நியமிப்புகள் கொடுக்கப்படலாம். பதில் சொல்லக்கூடிய வயது ஆனவுடனேயே இளம் பிள்ளைகளை கலந்தாலோசிப்பிற்குள் கொண்டு வாருங்கள். வெகு சில வார்த்தைகளாலான பதில்களை வரவழைக்கும் எளிதான கேள்விகளை அவர்களிடம் கேட்கலாம். படிப்பு நேரப் பகுதிகளை பிள்ளைகளைத் திட்டுவதற்கென உபயோகப்படுத்தாதீர்கள். மாறாக, பாராட்டு தெரிவியுங்கள், அவர்களுடைய முயற்சிகளுக்காக போற்றுதல் காண்பியுங்கள், ஆவிக்குரிய நோக்குநிலைகளை அவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாயிருங்கள்.

      5 நீங்கள் இருதயத்தை எட்டுகிறீர்கள் என்பதில் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? பதில்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் சொல்வதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். இருதய மனப்பான்மைகளை நிர்ணயிக்க சாதுரியமாக நோக்குநிலைக் கேள்விகளை உபயோகியுங்கள். நீங்கள் கேட்கலாம்: “பள்ளியில் உள்ள பிள்ளைகள் இந்த விஷயத்தைக் குறித்து எவ்வாறு உணருகின்றனர்? இந்தக் குறிப்பின் பேரில் ஏதாவது சந்தேகங்கள் உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கிறதா?” நோக்குநிலை கேள்விகளுக்கு உங்கள் பிள்ளைகள் கொடுக்கும் பதில்களுக்கு அளவுக்கு மேல் உணர்ச்சிவசப்பட்டு பிரதிபலிக்காதபடி கவனமாயிருங்கள். இல்லையென்றால் உங்கள் பிள்ளைகள் தங்களைப் பற்றி நேர்மையாக, வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். அவர்கள் பேசுவதற்கு நேரம் கொடுங்கள். நீங்கள் அவர்கள் மீதும் அவர்கள் பிரச்னைகள் மீதும் அக்கறையுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பது உங்கள் கற்பிக்கும் முயற்சிகளை அதிக சுலபமாக்கும்.—ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1986 பக்கங்கள் 23–5 பாருங்கள்.

      6 உங்கள் குடும்பப் படிப்பின் முக்கிய குறிக்கோள் யெகோவாவின் சிந்தனைகளை ஆழப் பதிய வைப்பது என்பதை மனதில் வையுங்கள், ஒரு சபைக் கூட்டத்தில் வெறுமென மனப்பாடமாய் ஒப்பிக்க ஒரு பதிலை கண்டுபிடிப்பதல்ல. (எபே. 3:17–19) இருதயத்திற்குள் தகவல்களை புகுத்த உழைப்பது என்று இது அர்த்தப்படுத்தும். கடவுளுடைய சித்தத்தை அவர்கள் ஏன் செய்ய விரும்ப வேண்டும், அது ஏன் வாழ்வதற்கு மிகச்சிறந்த முறையாயிருக்கிறது என்பதற்கான காரணங்களைக் குடும்பத்திற்குக் கொடுங்கள்.

      7 குடும்பத்தின் ஆவிக்குரியத் தன்மையை கட்டியமைப்பதற்கு ஒழங்கான குடும்ப பைபிள் படிப்பு இன்றியமையாதது. வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்க இது பிள்ளைகளைப் பயிற்றுவித்து தகுதியுள்ளவர்களாக்குகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய பெற்றோராகிய நீங்கள் சிறந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். கடவுள் கொடுத்த இந்த உத்தரவாதத்தை மேற்கொள்ளுங்கள். ஓர் அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்பை நிலையாய் நடத்த நீங்கள் எல்லா முயற்சியும் எடுத்தால் யெகோவா நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்