உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஜூலையில் பலன்தரத்தக்கவிதமாகச்சிற்றேடுகளைப் பயன்படுத்துதல்
    ராஜ்ய ஊழியம்—1993 | ஜூலை
    • ஜூலையில் பலன்தரத்தக்கவிதமாகச்சிற்றேடுகளைப் பயன்படுத்துதல்

      1 சீஷராக்கும் வேலையைத் துரிதப்படுத்துவதற்கு, அமைப்பு வித்தியாசமான அநேக பிரசுரங்களை தாராளமாக அளித்திருக்கிறது. அவற்றில் பூமிக்கான கடவுளுடைய நோக்கம், திரித்துவம், கடவுளுடைய பெயர், ராஜ்ய அரசாங்கம், மற்றும் துன்மார்க்கத்தைக் கடவுள் அனுமதித்திருப்பது ஆகிய குறிப்பிட்ட பொருள்களைக் கலந்தாராய்கிற சிற்றேடுகள் உள்ளன. நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உதவிசெய்ய எவ்வாறு பலன்தரத்தக்கவிதமாகச் சிற்றேடுகளை நாம் பயன்படுத்தலாம்?

      2 நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? சிற்றேடு, துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு புதிய உலகம் சமீபமாயிருக்கிறது என்பதை விளக்குகிறது. நாம் அதை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்? ஆலோசனைகளை நியாயங்கள் புத்தகத்திலுள்ள “துன்பம்” என்ற முக்கியத் தலைப்பில் பக்கம் 393 தொடங்கி காணலாம், அல்லது பக்கம் 12-ல், “அநீதி/துன்பம்” என்ற தலைப்பின்கீழுள்ள அறிமுகத்தை நீங்கள் தெரிவுசெய்யலாம்.

      3 நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:

      ◼ “நீங்கள் எப்பொழுதாவது இவ்வாறு சிந்தித்திருக்கிறீர்களா: ‘மனிதர்கள் எதிர்ப்படுகிற பிரச்னைகளையும் துன்பத்தையும் குறித்து உண்மையில் கடவுள் அக்கறைகொள்கிறாரா?’” பதிலுக்காக அனுமதியுங்கள். சங்கீதம் 72:12-14-ஐ வாசியுங்கள். பிறகு நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேட்டில் பக்கம் 8-க்குத் திருப்பி, அந்தப் பக்கத்தில் தடித்த தலைப்பின்கீழுள்ள குறிப்புகளையும், அதோடுகூட பக்கம் 18-ல் கொடுக்கப்பட்டுள்ள எதிர்காலத்திற்கான நம்முடைய நம்பிக்கையையும் கலந்துபேசுங்கள். அந்தச் சிற்றேடு மறுக்கப்பட்டால், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் அல்லது சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை போன்ற ஒரு துண்டுப்பிரதியை ஏன் அளிக்கக்கூடாது?

      4 நல்ல அரசாங்கம் இன்று அக்கறையூட்டும் பேச்சுப்பொருளாக இருக்கிறது. மனிதனுடைய ஆட்சி உலகத்தை ஐக்கியப்படுத்துமா என்று அநேகர் யோசிக்கின்றனர். பயன்தரும் தகவலானது, நியாயங்கள் புத்தகத்திலுள்ள “அரசாங்கம்” என்பதன்கீழ் பக்கம் 152-ல் தொடங்கி காணப்படுகிறது.

      5 நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:

      ◼ “மனிதர்களால் உண்மையில் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிக்கக்கூடுமா?” பதிலுக்காக அனுமதித்து, பிறகு இவ்வாறு கேளுங்கள்: “மனித சரித்திரத்தின் பதிவு என்ன காட்டுகிறது?” எரேமியா 10:23-க்குத் திருப்புங்கள், அல்லது நியாயங்கள் புத்தகத்தில் பக்கம் 152-க்குத் திருப்பி, பொருத்தமான வசனங்களையும் குறிப்புகளையும் வாசியுங்கள். அதற்குப்பிறகு, அரசாங்கம் சிற்றேட்டில் பக்கங்கள் 24 மற்றும் 25-க்குத் திருப்பி விளக்கப்படங்களையும் வேதவசனங்களையும் கலந்தாராயுங்கள். கடவுளுடைய அரசாங்கம் எவ்வாறு பூகோளம் முழுவதுமாக மக்களை ஐக்கியப்படுத்தும் என்பதை விளக்குங்கள். வீட்டுக்காரர் அந்தச் சிற்றேட்டை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை நீங்கள் அளிக்கலாம்.

      6 உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் குற்றச்செயல் பயம் இருந்தல், பின்வரும் அறிமுகம் கவனத்தை ஈர்ப்பதாய் இருக்கும்.

      7 நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:

      ◼ “‘கடவுள் அன்பானவர் என்றால், ஏன் அவர் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்?’ என்று அநேக மக்கள் யோசிக்கின்றனர், நீங்களுங்கூட இதைக்குறித்து யோசித்திருக்கிறீர்களா?” குறிப்புக்காக அனுமதித்து, பிறகு இவ்வாறு சொல்லுங்கள்: “மக்கள் செய்கிற கெட்ட காரியங்களுக்காக கடவுளைக் குறைகூறுவதற்கு எதிராக நீதிமொழிகள் 19:3 எச்சரிப்பதைக் கவனியுங்கள்.” அந்த வசனத்தை வாசித்தப் பிறகு, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேட்டில் பக்கம் 15-க்குக் கவனத்தைத் திருப்புங்கள், பிறகு பத்தி 27-ஐ வாசியுங்கள். இது தொடர்ந்துவருகிற பத்திகளிலுள்ள ஒரு கலந்துரையாடலுக்கு வழிநடத்தக்கூடும்.

      8 செம்மறியாடுபோன்ற மக்களுக்கு நற்செய்தியைப்பற்றி போதிக்கச் சிற்றேடுகளைப் பயன்படுத்துவது, நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கடவுளுடைய அமைப்போடு கூட்டுறவுகொள்வதற்கு எல்லா விதமான வாழ்க்கை நிலைகளிலிருந்து வரக்கூடிய மக்களுக்கு நாம் உதவிசெய்யலாம். நம்முடைய காலத்துக்கேற்ற சிற்றேடுகளை பலன்தரத்தக்கவிதமாக நாம் பயன்படுத்துகையில், பிரசங்க நடவடிக்கையில் பங்குகொள்வது நம்முடைய சிலாக்கியமாக இருக்கிறது.

  • பைபிளில் அக்கறையைத் தூண்டதிரும்பச்செல்லுதல்
    ராஜ்ய ஊழியம்—1993 | ஜூலை
    • பைபிளில் அக்கறையைத் தூண்டதிரும்பச்செல்லுதல்

      1 நற்செய்தியில் ஓரளவு அக்கறைக் காட்டுகிற மக்களை நாம் சிலசமயங்களில் வெளி ஊழியத்தில் சந்திக்கிறோம், ஆனால் நாம் சந்திக்கிற நேரத்தில் நம்மோடு பேசுவதற்கு அவர்கள் அதிக வேலையாய் இருக்கிறார்கள். ராஜ்ய செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நாம் மற்றொரு சமயத்தில் திரும்பச்சென்று சந்திக்க முயற்சிசெய்கிறோமா? அல்லது ஒருவேளை நாம் வீட்டுக்காரரோடு ஓர் அக்கறையூட்டும் சம்பாஷணையைக் கொண்டிருந்திருக்கிறோம், ஆனால் அவர் எந்தப் பிரசுரத்தையும் ஏற்றுக்கொள்கிறதில்லை. நாம் சத்தியத்தைப்பற்றி அவரோடு மேலுமாகப் பேசுவதற்குத் திரும்பிச்செல்கிறோமா?

      2 நம்முடைய பிராந்தியத்தை முழுமையாக செய்துமுடிப்பதும் நாம் கண்டுபிடிக்கக்கூடிய அக்கறையுள்ள ஆட்கள் அனைவரையும் திரும்பச் சந்திப்பதும் முக்கியமாயிருக்கிறது. ஒரு புத்தகத்தையோ பத்திரிகைகளையோ ஏற்றுக்கொள்கிறவர்களை மட்டுமே நாம் மறு சந்திப்புச் செய்கிறோமா? அப்படியானால், நாம் அக்கறையுள்ள சில மக்களை கவனிக்கத் தவறிக்கொண்டிருக்கிறோம். வெறுமனே அவர் பிரசுரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, மேலுமான ஆவிக்குரிய உற்சாகமூட்டுதலுக்குத் தகுதியற்றிருப்பதாக ஒருவரை நாம் நிச்சயமாகவே நியாயந்தீர்க்க விரும்பமாட்டோம். (ரோமர் 14:4-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஒருவேளை நம்முடைய சந்திப்புக்குப் பிறகு, வீட்டுக்காரர் நாம் சொன்னதைப்பற்றி சிந்திக்கக்கூடும் அல்லது அவரைச் சந்திப்பதற்கு நாம் செய்த முயற்சியை மதித்துணரக்கூடும். நாம் திரும்பிச்செல்லும்போது, அவர் ஒருவேளை அதிக சாதகமாகப் பிரதிபலிப்பவராக இருக்கலாம்.

      3 வேலையாய் இருந்த ஒரு நபரை மீண்டும் சந்திக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:

      ◼ “நான் உங்களை மீண்டும் ஒரு முறை பார்ப்பதில் சந்தோஷப்படுகிறேன். கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது, உங்களுக்கு நேரமில்லாத காரணத்தால் நாம் பேசமுடியவில்லை. நீங்கள் அதிக வேலையாக இருப்பவர் என்பதை நான் காணமுடிகிறது. ஆகவே நான் சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறேன். உங்களுக்காகவும் நீங்கள் நேசிக்கிறவர்களுக்காகவும் நல்ல ஆரோக்கியத்தைப்பற்றி நீங்கள் பெரும்பாலும் அக்கறையுடனிருக்கலாம். சகல வியாதிகளுக்கும் முடிவைக்கொண்டுவர கடவுள் வாக்களித்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தீர்களா? அது அதிசயமானதாய் இருக்குமல்லவா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] ‘இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்’ என்று தலைப்பிடப்பட்ட இந்தச் சிற்றேட்டில் 4-வது பத்தியிலுள்ள குறிப்பைக் கவனியுங்கள்.” நேரம் அனுமதிக்குமானால், பத்தியை வாசியுங்கள்; பிறகு புதிய உலகிலுள்ள நிலைமைகளைச் சித்தரித்துக்காட்டுகிற 5-வது பக்கத்திற்குக் கீழுள்ள வேதவசனங்களில் ஒன்றைச் சிந்தியுங்கள். வீட்டுக்காரர் ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையுடையவராக இருந்தால், நீங்கள் ஒரு வீட்டுப் பைபிள் படிப்பைத் தொடங்கக்கூடியவர்களாய் இருக்கலாம்.

      4 ஒரு துண்டுப்பிரதியை ஏற்றுக்கொண்ட ஒருவரை திரும்பச் சந்திக்கும்போது, இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:

      ◼ “கடந்த முறை நான் உங்களைப் பார்த்தபோது, நிஜமாகவே உலகத்தை ஆளுவது யார்? என்று தலைப்பிடப்பட்ட இந்தத் துண்டுப்பிரதியின் ஒரு பிரதியை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். சாத்தான் இந்த உலகத்தை ஆளுகிறான் என்பதை ஏற்றுக்கொள்வதைக் கடினமாகக் காண்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பக்கம் 6-லுள்ள முதல் பத்தியைக் கவனியுங்கள்.” அந்தப் பத்தியை வாசித்து, பிறகு இவ்வாறு கேளுங்கள்: “ஏன் சாத்தான் நம்மை ஏமாற்ற விரும்புவான்?” வீட்டுக்காரர் பதிலளித்தப் பிறகு, பக்கம் 3-லுள்ள நான்காவது பத்தியை ஒன்றுசேர்ந்து கலந்தாராயுங்கள். நீங்கள் அந்தத் துண்டுப்பிரதியை முற்றுமுழுமையாக சிந்திப்பதுடன் தொடரலாம், அல்லது நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேட்டை அறிமுகப்படுத்தி, பக்கம் 18-ல் உபதலைப்பின்கீழுள்ள தகவலைச் சிந்திக்க நீங்கள் விரும்பக்கூடும்.

      5 நம்பிக்கையோடு இருப்பதற்கும், ஒரு மட்டுப்பட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலுங்கூட, நம்முடைய பிரசங்க வேலையில் நாம் காண்கிற அக்கறையுள்ள ஆட்களைத் திரும்பச் சந்திப்பதற்கும் நல்ல காரணம் இருக்கிறது. மற்றவர்களைக்குறித்து அக்கறைகொள்வது, சத்தியத்தை அவர்கள் கற்றுக்கொள்ளும்படி உதவிசெய்யத் தூண்டுவிக்கப்படுவது முக்கியமாய் இருக்கிறது. யெகோவாவின் அமைப்பு, மற்றவர்களைத் தங்களுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையவர்களாக்குவதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடிய பிரசுரங்களையும் ஆலோசனையாகக் கூறப்பட்ட பிரசங்கங்களையும் அளிக்கிறது.—மத். 5:3.

      6 ஒருவேளை சிறிதளவே அக்கறையுடனிருந்த ஒருவருடன் நல்ல ஒரு சம்பாஷணையைக் கொண்டிருந்திருப்பீர்களாகில், அக்கறையை வளர்ப்பதற்கு மீண்டும் சென்று சந்திப்பதைத் தவறவிடாதீர்கள். அது ஒரு வீட்டுப் பைபிள் படிப்பைத் தொடங்குவதில் விளைவடைந்து ஒருவரை ஜீவனுக்கான பாதையில் வைக்கக்கூடும். இந்த ஜீவனைக் காக்கும் வேலையில் உள்ளப்பூர்வமாகத் தொடர்ந்து பங்குகொள்வதற்கு நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம்.—1 தீ. 4:16.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்