உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • இன்று

வெள்ளி, செப்டம்பர் 12

இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. —1 கொ. 7:31.

நீங்கள் நியாயமானவர் என்ற பெயரை எடுக்க வேண்டும். உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? வளைந்துகொடுக்கிறவர், விட்டுக்கொடுக்கிறவர், பொறுத்துக்கொள்கிறவர் என்று நான் பெயர் எடுத்திருக்கிறேனா? அல்லது, ரொம்ப கறார், கடுகடு பேர்வழி, பிடிவாதக்காரர் என்று பெயர் எடுத்திருக்கிறேனா? மற்றவர்களுடைய கருத்தை காதுகொடுத்துக் கேட்கிறேனா? மற்றவர்கள் சொல்கிற மாதிரி ஒன்றை செய்ய முடியுமென்றால் அதற்கு ஒத்துப்போகிறேனா?’ நாம் எந்தளவுக்கு வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்கிறோமோ, அந்தளவுக்கு யெகோவா மாதிரியும் இயேசு மாதிரியும் நடந்துகொள்வோம். நம் சூழ்நிலை மாறும்போது நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்க்காத கஷ்டங்களைக் கொண்டுவரலாம். திடீரென்று நமக்கு ஏதாவது பெரிய நோய் வந்துவிடலாம். அல்லது, பொருளாதார நிலைமையோ அரசியல் நிலைமையோ திடீரென்று மாறிவிடலாம். அதனால் வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டமாகிவிடலாம். (பிர. 9:11) நியமிப்புகளில் மாற்றம் வரும்போதுகூட நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்த நான்கு படிகளை எடுத்தால் புதிய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மையே மாற்றிக்கொள்ள, வளைந்துகொடுக்க முடியும்: (1) எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், (2) கடந்த காலத்தை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள், (3) வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள், (4) மற்றவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள். w23.07 21-22 ¶7-8

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

சனி, செப்டம்பர் 13

கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.—தானி. 9:23.

தானியேல் ஒரு போர்க் கைதியாக போனபோது அவருக்குச் சின்ன வயதுதான். சொந்த ஊரைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருந்த பாபிலோனுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனார்கள். அவர் இளைஞராக இருந்தாலும், பாபிலோன் அதிகாரிகளுக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. ஏன்? அவர்கள் தானியேலின் “வெளித்தோற்றத்தை” பார்த்தார்கள். (1 சா. 16:7) அவர் ‘எந்தக் குறையும் இல்லாமல், அழகாக’ இருப்பதைப் பார்த்தார்கள். அவர் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்ததையும் பார்த்தார்கள். அதனால்தான், ராஜாவின் அரண்மனையிலேயே சேவை செய்வதற்காக அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். (தானி. 1:3, 4, 6) யெகோவாவுக்கும் தானியேலைப் பிடித்திருந்தது. அவருடைய மனதையும் குணத்தையும் பார்த்துதான் யெகோவாவுக்குப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், நோவாவையும் யோபுவையும் போலவே தானியேல் நீதியாக நடப்பதாக யெகோவா சொன்னபோது தானியேலுக்குக் கிட்டத்தட்ட 20 வயதுதான். ஆனாலும், எத்தனையோ வருஷங்களாக கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த நோவாவுக்கும் யோபுவுக்கும் சமமாக தானியேலைப் பற்றி யெகோவா பேசினார். (ஆதி. 5:32; 6:9, 10; யோபு 42:16, 17; எசே. 14:14) அவர் வாழ்ந்த காலமெல்லாம் யெகோவா அவரை உயிருக்கு உயிராக நேசித்தார்.—தானி. 10:11, 19. w23.08 2 ¶1-2

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

ஞாயிறு, செப்டம்பர் 14

‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.’—எபே. 3:18.

ஒரு வீட்டை வாங்க முடிவு செய்வதற்கு முன்பு நேரில் போய் அதைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வீர்கள். இந்த விஷயத்தை பைபிள் படிப்பதோடு ஒப்பிட முடியும். பைபிளை வெறுமனே மேலோட்டமாகப் படித்துக்கொண்டு போனால், “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை” மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். (எபி. 5:12) ஒரு வீட்டை வாங்குவதற்குமுன் எப்படி வீட்டுக்குள் போய் ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாகக் கவனிப்பீர்களோ, அதேபோல் பைபிளுக்கு “உள்ளே போய்” எல்லா விவரங்களையும் அலசிப் பாருங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். எந்தெந்த உண்மைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை மட்டுமல்ல, அவற்றை ஏன் நம்புகிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ஆழமான சத்தியங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களிடமும் அதைத்தான் பவுல் சொன்னார். கடவுளுடைய வார்த்தையின் ‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னார். அப்படிச் செய்தால் விசுவாசத்தில் “வேரூன்றியவர்களாகவும் அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும்” அவர்களால் இருக்க முடியும் என்று சொன்னார். (எபே. 3:14-19) இன்று நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். w23.10 18 ¶1-3

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்