யோபு
12 அதற்கு யோபு,
2 “நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் ஆயிற்றே!
உங்களுக்குப் பிறகு ஞானிகள் என்று சொல்லிக்கொள்ள யார் இருக்கப்போகிறார்கள்?
3 ஆனால், நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை.
எனக்கும் புத்தி* இருக்கிறது.
நீங்கள் சொல்கிற விஷயங்களெல்லாம் யாருக்குத்தான் தெரியாது?
நீதிநேர்மையோடு நடப்பவனைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்.
5 எதற்கும் கவலைப்படாத ஆட்கள் தங்களுக்கு அழிவே வராது என்று நினைக்கிறார்கள்.
கஷ்டத்தில் துவண்டுபோகிற ஆட்கள்தான்* அழிந்துபோவார்கள் என்று நினைக்கிறார்கள்.
6 கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+
சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,
கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+
7 ஆனால், தயவுசெய்து மிருகங்களைக் கேட்டுப் பாருங்கள்; அவை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.
பறவைகளை விசாரித்துப் பாருங்கள்; அவை உங்களுக்கு விளக்கிச் சொல்லும்.
8 பூமியைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்;* அது உங்களுக்குச் சொல்லித்தரும்.
கடல்மீனும் உங்களுக்கு எடுத்துச்சொல்லும்.
9 யெகோவாதானே அவற்றையெல்லாம் உண்டாக்கினார்?
இந்த உண்மையை அறியாத படைப்பு எதுவுமே இல்லை.
10 அவருடைய கையில்தான் எல்லா ஜீவன்களின் உயிரும் இருக்கிறது.
மனுஷனின் மூச்சும் அவரிடம்தான் இருக்கிறது.+
17 ஆலோசகர்களை அவர் வெறுங்காலில் அலைய விடுகிறார்.*
நீதிபதிகளை முட்டாள்களாக்குகிறார்.+
18 ராஜாக்களின் அதிகாரத்தைப் பறிக்கிறார்.+
அவர்களை அடிமையாக்குகிறார்.
19 குருமார்களை வெறுங்காலில் அலைய விடுகிறார்.+
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களை வீழ்த்துகிறார்.+
20 நம்பகமான ஆலோசகர்களின் வாயை அடைத்துவிடுகிறார்.
பெரியவர்களின் புத்தியை அழித்துவிடுகிறார்.
21 செல்வாக்கு உள்ளவர்களுக்கு மிகுந்த அவமானம் வரும்படி செய்கிறார்.+
பலமுள்ளவர்களைப் பலவீனமாக்குகிறார்.
22 இருட்டுக்குள் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகிறார்.+
கும்மிருட்டுக்குள் புதைந்திருப்பவற்றை வெட்டவெளிச்சமாக்குகிறார்.
23 தேசங்களை வளரவிட்டு அவற்றை அழித்துவிடுகிறார்.
ஜனங்களைப் பெருக வைத்து, அவர்களை வேறு தேசத்துக்குக் கைதிகளாக அனுப்பிவிடுகிறார்.