யோபு
2 கேலி செய்கிறவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.+
அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு அலுத்துவிட்டது.
3 கடவுளே, எனக்காகத் தயவுசெய்து உத்தரவாதம் கொடுங்கள்.
வேறு யார் எனக்குக் கைகொடுத்து, எனக்காக உத்தரவாதம் தருவார்கள்?+
5 நண்பர்களுக்குத் தானம் செய்யப்போவதாக ஒருவன் சொல்கிறான்.
ஆனால், அவனுடைய பிள்ளைகளே மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள்.
8 நீதிநேர்மையோடு நடப்பவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
கெட்டவர்களை* பார்த்து நல்லவர்கள் கொதித்துப்போகிறார்கள்.
10 சரி, நீங்கள் எல்லாரும் தொடர்ந்து வாதாடிப் பாருங்கள்.
ஏனென்றால், இதுவரை நீங்கள் யாருமே ஞானமாகப் பேசியதுபோல் எனக்குத் தெரியவில்லை.+
12 நீங்கள் உண்மை பேசுவதற்குப் பதிலாகப் பொய் பேசுகிறீர்கள்.*
இருள் சூழ்ந்திருக்கும்போது, ‘வெளிச்சம் வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
14 சவக்குழியைப்+ பார்த்து, ‘நீதான் என் தகப்பன்!’ என்று சொல்வேன்.
புழுக்களைப் பார்த்து, ‘என் தாயே! என் சகோதரியே!’ என்று சொல்வேன்.
15 எனக்கு எங்கே நம்பிக்கை இருக்கிறது!+
எனக்கு நம்பிக்கை இருப்பதாக யார்தான் நினைப்பார்கள்?