யோபு
28 பின்பு அவர்,
“வெள்ளியைத் தோண்டி எடுக்க ஒரு இடம் இருக்கிறது.
தங்கத்தைப் புடமிடவும் ஒரு இடம் இருக்கிறது.+
3 அதற்காக நிலத்துக்கு அடியிலுள்ள இருட்டையும் வெளிச்சமாக்குகிறான்.
கும்மிருட்டுக்குள் எவ்வளவு தூரம் இறங்க முடியுமோ அவ்வளவு தூரம் இறங்குகிறான்.
விலைமதிப்புள்ள பொருள்களைத் தேடுகிறான்.
4 ஜனங்கள் குடியிருக்கிற இடத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் சுரங்கம் தோண்டுகிறான்.
மனுஷ நடமாட்டமே இல்லாமல்போன இடத்தில் தோண்டுகிறான்.
சிலர் கயிற்றில் தொங்கிக்கொண்டு கீழே இறங்கி வேலை செய்கிறார்கள்.
6 அங்கே இருக்கிற பாறைகளில் நீலமணிக் கல் கிடைக்கிறது.
அங்கே இருக்கிற மண்ணில் தங்கம் கலந்திருக்கிறது.
7 அந்தச் சுரங்கப் பாதை எந்தக் கழுகின் கண்ணுக்கும் தெரியாது.
கறுப்புப் பருந்தும் அதைப் பார்த்தது கிடையாது.
8 கொடிய மிருகங்கள் அங்கே நடமாடியதில்லை.
இளம் சிங்கம் அங்கே சுற்றித் திரிந்ததில்லை.
9 கெட்டியான பாறையை மனுஷன் உடைக்கிறான்.
மலைகளைப் புரட்டிப் போடுகிறான்.
11 நிலத்தடி நீரோடைகளுக்கு அணை போடுகிறான்.
மறைந்து கிடப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறான்.
14 ‘அது எனக்குள்ளே இல்லை’ என்று ஆழ்கடல் சொல்கிறது.
‘அது என்னிடம் இல்லை’ என்று பெருங்கடலும் சொல்கிறது.+
16 ஓப்பீரின்* தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.+
அபூர்வமாகக் கிடைக்கிற கோமேதகத்தையும் நீலமணிக் கல்லையும் கொடுத்தால்கூட அது கிடைக்காது.
17 தங்கமும் விலை உயர்ந்த கண்ணாடியும் அதன் பக்கத்தில் வர முடியாது.
சொக்கத்தங்கத்தில் செய்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அது கிடைக்காது.+
18 பவளமும் படிகக்கல்லும் அதன் பக்கத்தில் நெருங்க முடியாது.+
பை நிறைய இருக்கிற முத்துக்களைவிட ஞானம் ரொம்பவே மதிப்புள்ளது.
19 எத்தியோப்பியாவின்* புஷ்பராகக் கல்லும்+ அதற்குச் சமமாகாது.
சுத்தமான தங்கத்தைக் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது.
21 எல்லா உயிர்களின் கண்ணுக்கும் அது மறைவாக இருக்கிறது.+
வானத்தில் பறக்கிற பறவைகளாலும் அதைப் பார்க்க முடியாது.
23 அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
அது எங்கே இருக்கிறது என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.+
24 அவருடைய கண் பூமி முழுவதையும் பார்க்கிறது.
வானத்துக்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் அவர் கவனிக்கிறார்.+
25 அவர் காற்றுக்குப் பலத்தைக் கொடுத்தபோது,+
தண்ணீரை அளந்து வைத்தபோது,+
26 மழைக்குச் சட்டம் போட்டபோது,+
மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியபோது,+
27 அவர் ஞானத்தைப் பார்த்தார், அதை விளக்கிக் காட்டினார்.
அதை நிலைநிறுத்தினார், அதைச் சீர்தூக்கிப் பார்த்தார்.
28 அவர் மனுஷனிடம்,