யோபு
35 பின்பு எலிகூ,
3 ‘நான் நீதிமானாக இருந்து என்ன பிரயோஜனம்?*
பாவம் செய்யாததால் அப்படி என்ன பலன் கிடைத்துவிட்டது?’+ என்று கேட்கிறீர்களே.
5 வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள்.
அவ்வளவு உயரத்தில் இருக்கிற மேகங்களைக் கவனித்துப் பாருங்கள்.+
6 நீங்கள் பாவம் செய்வதால் கடவுளுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?+
அக்கிரமங்கள் செய்வதால் அவருக்கு என்ன ஆகப்போகிறது?+
8 நீங்கள் அக்கிரமம் செய்வதால் பாதிக்கப்படுவது உங்களைப் போன்ற மனுஷர்கள்தான்.
உங்கள் நீதியினால் நன்மை அடைவதும் மனுஷர்கள்தான்.
9 கொடுமை தாங்க முடியாமல் ஜனங்கள் கதறி அழுகிறார்கள்.
அடக்கி ஒடுக்குகிறவர்களின் கையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்கள்.+
10 ஆனால் யாருமே, ‘என்னுடைய மகத்தான படைப்பாளராகிய கடவுள் எங்கே?+
ராத்திரியில் நான் புகழ் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமானவர் எங்கே?’+ என்று கேட்பதில்லை.
11 மிருகங்களைவிட+ நமக்கு அதிகமான அறிவைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.+
பறவைகளைவிட நமக்கு அதிகமான புத்தியைக் கொடுத்திருக்கிறார்.
12 ஆனால், கெட்ட ஜனங்கள் பெருமைபிடித்து அலைகிறார்கள்.+
அதனால்தான், அவர்கள் உதவிக்காகக் கெஞ்சினாலும் கடவுள் கேட்பதில்லை.+
13 அவரிடம் நாம் போலித்தனமாகக் கெஞ்சினால் அவர் கேட்பாரா?+
சர்வவல்லமையுள்ளவர் கண்டிப்பாக அதைக் காதில் வாங்க மாட்டார்.
14 அப்படியிருக்கும்போது, அவர் உங்களைக் கண்டுகொள்வதில்லை என்று புலம்பினால்+ அவர் கேட்பாரா?
அவர்தான் உங்களுக்குத் தீர்ப்பு சொல்லப்போகிறார்; அதுவரை பொறுமையோடு காத்திருங்கள்.+