ஓசியா
ஏனென்றால், நீ விபச்சாரம் செய்து* உன் கடவுளைவிட்டு விலகிப்போனாய்.+
களத்துமேடுகளில் செய்த விபச்சாரத்துக்கு ஆசையோடு கூலி வாங்கினாய்.+
3 யெகோவாவின் தேசத்தில் இனி நீ வாழ மாட்டாய்.+
எப்பிராயீமே, நீ எகிப்துக்குத் திரும்புவாய்.
அசீரியாவில் அசுத்தமானவற்றைச் சாப்பிடுவாய்.+
4 இனி யெகோவாவுக்குத் திராட்சமதுவைப் பானபலியாகக் கொடுக்க மாட்டாய்.+
உன்னுடைய பலிகளை அவர் விரும்ப மாட்டார்.+
அவை சாவு வீட்டு சாப்பாட்டைப் போல இருக்கின்றன.
அவற்றைச் சாப்பிடுகிற எல்லாரும் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்வார்கள்.
உன் சாப்பாடு உன்னோடு இருக்கட்டும்.
அது யெகோவாவின் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படாது.
5 விருந்து நாளில் நீ என்ன செய்வாய்?
யெகோவாவின் பண்டிகை நாளில் என்ன செய்வாய்?
6 அழிவைப் பார்த்து நீ தப்பியோடுவாய்.+
எகிப்து உன்னை வாரிக்கொள்ளும்,+ மோப் உன்னைப் புதைத்துவிடும்.+
விலைமதிப்புள்ள வெள்ளி இருந்த இடத்தில் முட்செடிகள் முளைக்கும்.
உன் கூடாரங்கள் முட்புதராகிவிடும்.
உன் தீர்க்கதரிசி முட்டாளாவான், தெய்வ வாக்கு சொல்கிறவன் பைத்தியமாவான்.
உன் குற்றங்களுக்குக் கணக்கில்லை, அதனால் உன்மேல் காட்டப்படுகிற வெறுப்புக்கு அளவில்லை.”
8 எப்பிராயீமின் காவல்காரன்+ என் கடவுள் பக்கம் இருந்தான்.+
ஆனால், இப்போது அவனுடைய தீர்க்கதரிசிகளின் செயல்களெல்லாம்+ வேடனின் கண்ணிகள்போல் இருக்கிறது.
அவனுடைய கடவுளின் ஆலயத்தில் பகை தங்கியிருக்கிறது.
9 கிபியாவில் நடந்தது போல இஸ்ரவேலர்கள் மிகவும் சீர்கெட்டு நடக்கிறார்கள்.+
அவர்களுடைய அக்கிரமத்தைக் கடவுள் நினைத்துப் பார்ப்பார், பாவங்களுக்காகத் தண்டிப்பார்.+
10 “வனாந்தரத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடிப்பதுபோல் இஸ்ரவேலை நான் கண்டுபிடித்தேன்.+
உன் முன்னோர்கள் முதலில் பழுத்த அத்திப் பழங்களைப் போல் இருந்தார்கள்.
ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடம்+ போய்விட்டார்கள்.
வெட்கங்கெட்ட தெய்வத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.+
தாங்கள் நேசித்த சிலையைப் போல் அருவருப்பானவர்களாக ஆனார்கள்.
11 எப்பிராயீமின் பெருமையெல்லாம் பறவையைப் போலப் பறந்துபோனது.
அவர்கள் யாரும் குழந்தையைப் பெற்றெடுப்பது இல்லை, கர்ப்பமாக இருப்பது இல்லை, கருத்தரிப்பதுகூட இல்லை.+
நான் அவர்களைவிட்டு விலகும்போது அவர்களுக்குக் கேடுதான் வரும்!+
13 மேய்ச்சல் நிலத்தில் நடப்பட்ட எப்பிராயீம் எனக்கு தீருவைப் போல இருந்தான்.+
கொலை செய்யப்படுவதற்காகத் தன் மகன்களை வெளியே கொண்டுபோய் விடுவான்.”
14 யெகோவாவே, அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள்.
கரு தங்காத கர்ப்பப்பையையும் பால் சுரக்காத மார்பகங்களையும் கொடுங்கள்.
15 “கில்காலில் எல்லா கெட்ட காரியங்களையும் அவர்கள் செய்தார்கள்;+ அங்கே நான் அவர்களை வெறுத்தேன்.
அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தண்டனையாக அவர்களை என் வீட்டிலிருந்து துரத்திவிடுவேன்.+
இனி அவர்களிடம் அன்புகாட்ட மாட்டேன்.+
அவர்களுடைய தலைவர்கள் எல்லாரும் பிடிவாதக்காரர்கள்.
16 எப்பிராயீம் வெட்டப்படுவான்.+
அவனுடைய வேர் காய்ந்துபோகும், பழங்கள் எதுவும் தர மாட்டான்.
அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தாலும், அவனுடைய செல்லப் பிள்ளைகளைக் கொன்றுவிடுவேன்.”