-
சங்கீதம் 146:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
கைதிகளை யெகோவா விடுதலை செய்கிறார்.+
-
-
ஏசாயா 49:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“அனுக்கிரகக் காலத்தில் நான் உனக்குப் பதிலளித்தேன்.+
மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்.+
ஜனங்களுக்கு உத்தரவாதமாக* கொடுப்பதற்காக உன்னைப் பாதுகாத்து வந்தேன்.+
நீ தேசத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவரவும்,
பாழாகிப்போன நிலங்களில் ஜனங்களைத் திரும்ப வாழ வைக்கவும்,+
9 சிறையில் இருப்பவர்களிடம், ‘வெளியே வாருங்கள்!’+ என்று சொல்லவும்,
இருட்டில் இருப்பவர்களிடம்,+ ‘வெளிச்சத்துக்கு வாருங்கள்!’ என்று சொல்லவும் அப்படிச் செய்தேன்.
வழியோரங்களில் அவர்கள் மேய்வார்கள்.
பாதைகளின்* இரண்டு பக்கங்களிலும் அவர்களுடைய மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.
-