-
1 சாமுவேல் 2:12-17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 ஏலியின் மகன்கள் கெட்டவர்களாக இருந்தார்கள்.+ யெகோவாவைத் துளியும் மதிக்கவில்லை. 13 ஜனங்கள் செலுத்தும் பலிகளிலிருந்து குருமார்களுக்கான பங்கை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில்,+ ஏலியின் மகன்கள் முறைகேடாக நடந்துகொண்டார்கள். யாராவது பலி செலுத்தினால், குருவானவரின் பணியாள் பெரிய முள்கரண்டியைக் கொண்டுவந்து இறைச்சி வேகும்போதே பானையிலோ பாத்திரத்திலோ விடுவான். 14 பின்பு, அந்த முள்கரண்டியில் சிக்குவதையெல்லாம் குருவானவருக்காக எடுத்துக்கொள்வான், குருவானவரும் வாங்கிக்கொள்வார். சீலோவுக்கு வரும் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். 15 அதோடு, பலி செலுத்துகிறவர் கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே+ குருவானவரின் பணியாள் வந்து, “இறைச்சியை குருவானவருக்குச் சுட்டுக் கொடுக்க வேண்டும். வெந்த கறி வேண்டாம், பச்சைக் கறியைத் தா. அதைத்தான் அவர் வாங்கிக்கொள்வார்” என்று கேட்பான். 16 அதற்கு அந்த நபர், “அவர்கள் முதலில் கொழுப்பைத் தகனிக்கட்டும்,+ பின்பு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வார். ஆனால் அந்தப் பணியாள், “வேண்டாம், இப்போதே தா. நீ தராவிட்டால், நானே எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான். 17 இப்படி, அந்தப் பணியாட்களும் யெகோவாவின் பார்வையில் மிக மோசமான பாவத்தைச் செய்தார்கள்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பலியை அந்த ஆட்கள் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
-