-
மத்தேயு 15:3-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதற்கு அவர், “உங்களுடைய பாரம்பரியத்தால் ஏன் கடவுளுடைய கட்டளையை மீறுகிறீர்கள்?+ 4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட* வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார். 5 ஆனால், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது”+ என்று சொல்லிவிட்டால், 6 அதன்பின் அவன் தன்னுடைய அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதே இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி, உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்.+
-