-
1 தீமோத்தேயு 6:17-19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.* 18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல். 19 இந்த விதத்தில் எதிர்காலத்துக்காக நல்ல அஸ்திவாரத்தைப் போட்டு, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்+ என்று அறிவுரை சொல்; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வை அவர்களால் உறுதியாகப் பிடித்துக்கொள்ள முடியும்.+
-