16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”
13 அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’+ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொன்னார்.
24 அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார்.
4 “உங்களில் யாராவது தன்னுடைய 100 செம்மறியாடுகளில் ஒன்று காணாமல் போனால், மற்ற 99 ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, வழிதவறிப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் அதைத் தேடிக்கொண்டிருக்க மாட்டானா?+
15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+