பைபிள் என்ன சொல்கிறது?
பூமியிலிருக்கும் எல்லாருக்கும் நீதி நியாயம் கிடைக்குமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கிடைக்கும்
கிடைக்காது
கிடைக்கலாம்
பைபிள் தரும் பதில்
“எளியவர்களுக்காக யெகோவா வழக்காடுவார். ஏழைகளுக்கு நியாயம் செய்வார்; இது எனக்கு நன்றாகத் தெரியும்.” (சங்கீதம் 140:12) கடவுளுடைய அரசாங்கத்தில் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும்.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
இன்று உலகத்தில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சீக்கிரத்தில் அதையெல்லாம் சரிசெய்ய போகிறார்.—பிரசங்கி 5:8.
கடவுள் இந்தப் பூமியை நீதியாக ஆட்சி செய்யும்போது மக்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிப்பார்கள்.—ஏசாயா 32:16-18.
கடவுள் பாரபட்சம் காட்டுகிறாரா?
சிலர் சொல்கிறார்கள் சில தொகுதியினரை மட்டும் கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார்... வேறு சிலரை அவர் சபித்திருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். கடவுள் எல்லாரையும் சமமாகத்தான் பார்க்கிறார் என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் தரும் பதில்
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுள் எல்லாரையும் சமமாகத்தான் பார்க்கிறார்.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
“எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” பைபிள் ஒரு நல்ல செய்தியைச் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 14:6.