அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு டிசம்பர்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்: துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? ஆர்வம் காட்டினால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை எப்படி நடத்துவோம் என காட்டுங்கள். ஜனவரி, பிப்ரவரி: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றை கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.
◼ 2014-ல் இயேசுவின் மரண நினைவுநாள் ஏப்ரல் 14 திங்கட்கிழமை அன்று அனுசரிக்கப்படும்.
◼ மார்ச் 2013-ல் துணை பயனியர் ஊழியம் செய்யும் பிரஸ்தாபிகள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ அறிக்கை செய்யலாம். அதோடு, அந்த மாதத்தில் வட்டாரக் கண்காணி சந்திக்கும் சபைகளில் உள்ள அனைத்து துணை பயனியர்களும், ஒழுங்கான பயனியர்களுக்கான முழு கூட்டத்திலும் கலந்துகொள்ளலாம்.
◼ ஞானஸ்நானம் எடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள, நல்ல நிலைநிற்கையிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பெத்தேல் சேவைக்கு விண்ணப்பிக்கலாம். முக்கியமாக, சென்னையில் உள்ள மொழிப்பெயர்ப்பு அலுவலகத்தில் சேவை செய்ய மொழிப்பெயர்ப்புத் திறனுள்ளவர்களுக்கு தற்போது அதிக தேவை இருக்கிறது. விண்ணப்பப் படிவங்களை கிளை அலுவலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.