அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூலை: கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றைக் கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். ஆகஸ்ட்: விசேஷ விநியோகிப்பு. வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற துண்டுப்பிரதியை அளிப்போம். வீட்டுக்காரருக்கு இன்டர்நெட் பயன்படுத்துவதைப் பற்றி அதிகம் தெரியாவிட்டால் பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள்.
◼ மண்டல மாநாட்டிற்கு அல்லது சர்வதேச மாநாட்டிற்கு முந்தைய வார ஊழியக் கூட்டத்தில் மாற்றம் செய்து இந்த இரண்டையும் மறுபார்வை செய்யுங்கள்: (1) இந்தப் பிரதியிலுள்ள உட்சேர்க்கை. (2) ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு படிகளைப் பற்றி சொல்லும் ஆகஸ்ட் 3, 2013 தேதியிட்ட எல்லா சபைகளுக்கான கடிதம். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, சபைத் தேவைகள் பகுதியில், பிரஸ்தாபிகள் மாநாட்டில் கற்றுக்கொண்ட பயனுள்ள ஊழியக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.