உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp22 எண் 1 பக். 8-9
  • 2 | பழிவாங்க துடிக்காதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2 | பழிவாங்க துடிக்காதீர்கள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் போதனை:
  • போதனையின் அர்த்தம்:
  • நீங்கள் இப்படிச் செய்யலாம்:
  • உங்கள் மனம் புண்படுகையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பழிவாங்குதல் தவறா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • வெறுப்பை வெல்ல முடியும்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
wp22 எண் 1 பக். 8-9
கோபமாக இருக்கும் இரண்டு ஆண்கள், ஒருவரைவொருவர் பார்த்தபடி இரண்டு மரக்கிளைகளின் மேல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்திருக்கும் கிளையை அவர்களே ரம்பம் வைத்து அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

2 | பழிவாங்க துடிக்காதீர்கள்

பைபிள் போதனை:

‘யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள். . . . கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள். . . . “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால், நீங்கள் பழிக்குப்பழி வாங்காதீர்கள்.’—ரோமர் 12:17-19.

போதனையின் அர்த்தம்:

நமக்கு எதிராக யாராவது எதையாவது செய்தால் கோபம் வருவது இயல்புதான். ஆனால், நாம் பழிவாங்கக் கூடாது என்று கடவுள் நினைக்கிறார். அவரே அதைச் சரி செய்யும்வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—சங்கீதம் 37:7, 10.

நீங்கள் இப்படிச் செய்யலாம்:

பழிவாங்குவது பகையைத்தான் வளர்க்கும்! ஏனென்றால், நமக்குத் தவறு செய்கிற தன்மை இருக்கிறது. அதனால், யாராவது உங்களுக்குக் கெடுதல் செய்தால் பதிலுக்குப் பதில் செய்யாதீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். அமைதியாகவும் சமாதானமாகவும் போவதற்கு முயற்சி செய்யுங்கள். சிலசமயங்களில், விஷயங்களைப் பெரிது படுத்தாமல் அவற்றை விட்டுத்தள்ளுவது ரொம்ப நல்லது. (நீதிமொழிகள் 19:11) ஒருவேளை, உங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றி போலீஸிடமோ அதிகாரிகளிடமோ சொல்வது நல்லது என்று தோன்றினால், நீங்கள் அப்படியும் செய்யலாம்.

பழிவாங்குவது தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போல்!

சமாதானமாக போவதற்கு நீங்கள் முயற்சி செய்தும் பிரச்சினை தீரவில்லை என்றால் என்ன செய்வது? அப்போதுகூட பழிக்குப்பழி வாங்காதீர்கள்! பழிவாங்குவது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும். அதற்குப் பதிலாக, வெறுப்பு என்ற சங்கிலியை உடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அந்தப் பிரச்சினைக்குக் கடவுளால் மட்டும்தான் ஒரு நல்ல தீர்வு கொடுக்க முடியும் என்று நம்புங்கள். பைபிள் சொல்கிற மாதிரி ‘அவரையே சார்ந்திருங்கள், அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்.’—சங்கீதம் 37:3-5.

எப்படி மாறினார்...—ஏட்ரியன்

பழிவாங்கும் எண்ணத்தைப் புதைத்தார்

ஏட்ரியன்.

டீனேஜ் வயது ஆரம்பித்தப்போதே ஏட்ரியன் ஒரு ரவுடியாக ஆகிவிட்டார். தனக்குக் கெடுதல் செய்தவர்களை அவர் பழிவாங்காமல் விட்டதே இல்லை. “நான் எப்பவுமே துப்பாக்கியும் கையுமாதான் சுத்துவேன். அடிக்கடி சண்ட போடுவேன். நிறைய தடவை உடம்பெல்லாம் இரத்தமா தெருவுல கிடந்தேன். என்னை பாக்குறவங்கலாம் நான் செத்துட்டேனு நினைப்பாங்க” என்கிறார் ஏட்ரியன்.

பதினாறு வயது இருக்கும்போது ஏட்ரியன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். “பைபிள படிக்க படிக்க என்னை நானே மாத்திக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். மனதில் இருந்த வெறுப்பையும், தொட்டதற்கெல்லாம் அடிதடியில் இறங்கும் பழக்கத்தையும் அவர் தூக்கிப்போட வேண்டியிருந்தது. பழிவாங்குவதைப் பற்றி ரோமர் 12:17-19-ல் படித்த விஷயம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. “நமக்கு நடக்கிற அநியாயத்த யெகோவா கண்டிப்பா சரி செய்வாரு. அதுவும், அவரோட வழியில அவரோட நேரத்தில அதை செய்வாரு. இத புரிஞ்சிக்கிட்டதுனால கொஞ்சம் கொஞ்சமா என்னோட வாழ்க்கைய நான் மாத்திக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.

ஒரு நாள் சாயங்காலம் ஏட்ரியனை ஒரு ரவுடி கும்பல் தாக்கியது. முன்பிருந்தே ஏட்ரியனுக்கும் இவர்களுக்கும் ஆகவே ஆகாது. இவரைத் தாக்கிய அந்த ரவுடி கும்பல் தலைவன், “வா! வந்து மோதிப் பாரு” என்று சத்தமாகச் சொன்னான். “அவன ஒரே குத்தா குத்திடணும்னு எனக்கு அப்போ தோனுச்சு” என்று ஏட்ரியன் சொல்கிறார். ஆனால், அவர்களை அப்படி தாக்குவதற்குப் பதிலாக யெகோவாவிடம் சிறிய ஜெபம் செய்துவிட்டு அங்கிருந்து அவர் போய்விட்டார்.

பிறகு என்ன நடந்தது என்று ஏட்ரியன் சொல்கிறார்: “அடுத்த நாள் மறுபடியும் அந்த கும்பலோட தலைவன நான் பாத்தேன். இந்த தடவ அவன் தனியா இருந்தான். அவன பாத்தப்போ கோபம் தலைக்கேருச்சு. ஆனா, கோபத்த கட்டுபடுத்த உதவுங்கனு மனசுக்குள்ள யெகோவாகிட்ட வேண்டுனேன். அப்போ, எதிர்பாக்காத ஒரு விஷயம் நடந்துச்சு. அவன் என்கிட்ட வந்து ‘என்ன மன்னிச்சிடு. நேத்து அப்படி நடந்திருக்கக்கூடாது. எனக்கும் உன்ன மாதிரி ஆகணும். நானும் பைபிள் படிக்கணும்’னு சொன்னான். அப்பதான் கோபத்த கட்டுப்படுத்துனது எவ்வளவு நல்லதா போச்சுனு யோசிச்சு சந்தோஷப்பட்டேன். அதுக்கு அப்புறம் நானும் அவனும் சேர்ந்து பைபிள படிக்க ஆரம்பிச்சோம்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்