உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 9 பக். 20-21
  • பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • பரதீஸ்—மிக விரைவில்!
    கடவுளுடைய நண்பர்
  • பாகம் 9
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • ஒரு மேம்பட்ட வாழ்க்கை—விரைவில்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 9 பக். 20-21

பாகம் 9

பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?

இன்று நடக்கிற கெட்ட காரியங்களை வைத்தே கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். லூக்கா 21:10, 11; 2 தீமோத்தேயு 3:1-5

கடைசி நாட்களில் நடக்கும் கெட்ட விஷயங்கள்—சூதாட்டம், போர், நோய், பஞ்சம், அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகள், வீட்டில் நடக்கும் சண்டைகள்

இன்று இருக்கிற உலக நிலைமைகளைப் பற்றி பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. மக்கள் பண ஆசை பிடித்தவர்களாக இருப்பார்கள், கொடூரமாக நடந்துகொள்வார்கள், சுகபோகமாக வாழ ஆசைப்படுவார்கள், அப்பா-அம்மா பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறது.

அதோடு, பெரிய நிலநடுக்கங்கள், போர்கள், பஞ்சங்கள், பயங்கர வியாதிகள் ஆகியவை இருக்கும் என்று பைபிள் சொல்லியிருக்கிறது. இதெல்லாம் இப்போது நடக்கிறது.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பிரசங்கிக்கிறார்

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்றும் இயேசு சொன்னார். —மத்தேயு 24:14.

அக்கிரமத்துக்கும் அநியாயத்துக்கும் கடவுளுடைய ஆட்சி முடிவுகட்டும். 2 பேதுரு 3:13

கெட்டவர்கள் அர்மகெதோனில் அழிக்கப்படுகிறார்கள், சாத்தானும் அவனுடைய பேய்களும் தண்டிக்கப்படுகிறார்கள்

கெட்டவர்கள் எல்லாரையும் யெகோவா சீக்கிரத்தில் அழிப்பார்.

சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

பரலோகத்தில் இருக்கும் சிம்மாசனத்தில் இயேசு உட்கார்ந்திருக்கிறார், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்

கடவுள் சொல்வதைக் கேட்கிறவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்கள். சமாதானமான பூஞ்சோலை பூமியில் வாழ்வார்கள். அங்கே பயம் இருக்காது. எல்லாரையும் நம்பலாம், எல்லாரும் அன்பாக இருப்பார்கள்.

  • நாம் வாழ்கிற காலத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?—மத்தேயு 24:3-14.

  • கெட்டவர்கள் எல்லாரையும் கடவுள் அழிப்பார்.—2 பேதுரு 3:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்