உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • இன்று

புதன், ஜூலை 30

நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.—அப். 4:20.

பிரசங்கிக்கக் கூடாதென்று அரசாங்க அதிகாரிகள் சொன்னாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலம், முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போலவே நாமும் நடந்துகொள்ளலாம். ஊழியத்தை நல்லபடியாகச் செய்து முடிக்க யெகோவா உதவி செய்வார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். அதனால் தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யலாம். பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நம்மில் நிறைய பேருடைய உடல் அல்லது மனம் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்... அன்பானவர்களை மரணத்தில் இழந்து நாம் தவித்துக்கொண்டு இருக்கலாம்... குடும்பப் பிரச்சினைகளால், துன்புறுத்தலால், அல்லது வேறு சில பிரச்சினைகளால்கூட நாம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அதுவும், கொள்ளைநோய், போர் போன்றவை வந்துவிட்டால் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பது நமக்கு இன்னும் கஷ்டமாகிவிடலாம். அந்த மாதிரி சூழ்நிலையில், ஒரு நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். யெகோவா ‘உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்’ என்று நம்பிக்கையோடு இருங்கள். (சங். 37:3, 5) விடாமல் ஜெபம் செய்வது, ‘உபத்திரவத்தில் சகித்திருக்க’ நமக்கு உதவும். (ரோ. 12:12) நாம் படும் பாடுகள் யெகோவாவுக்குத் தெரியும், ‘உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார்.’—சங். 145:18, 19. w23.05 5-6 ¶12-15

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

வியாழன், ஜூலை 31

நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.—எபே. 5:10.

முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில், “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கேற்ற மாதிரி செயல்பட வேண்டும். (எபே. 5:17) நம் சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் நியமங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, அந்த சூழ்நிலையைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்வோம். அந்த நியமங்களின்படி செய்யும்போது, நல்ல தீர்மானங்களை எடுப்போம். இந்த உலகத்தில் இருக்கும் விஷயங்களில் நாம் மூழ்கிவிட வேண்டும், கடவுளுக்கு சேவை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்கக் கூடாது என்று ‘பொல்லாதவனான’ சாத்தான் நினைக்கிறான். (1 யோ. 5:19) யெகோவாவுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக பணம் பொருள், கல்வி, வேலை என்று இவற்றுக்குப் பின்னால் ஒரு கிறிஸ்தவர் ஓட ஆரம்பித்துவிடலாம். ஆனால் அவர் அப்படிச் செய்தால், உலகத்தில் இருக்கிறவர்கள் மாதிரி அவர் யோசிக்கிறார் என்று அர்த்தம். இந்த விஷயங்கள் எல்லாம் தவறு இல்லைதான். ஆனால், அதெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வந்துவிடக் கூடாது. w24.03 24 ¶16-17

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

வெள்ளி, ஆகஸ்ட் 1

நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும். ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.—சங். 34:19.

இந்த வசனத்திலிருந்து இரண்டு முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். (1) நீதிமான்களுக்குப் பிரச்சினைகள் வரும். (2) அந்தப் பிரச்சினைகளிலிருந்து யெகோவா நம்மைக் காப்பாற்றுகிறார். எப்படி? வாழ்க்கையில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறார். அவருக்குச் சேவை செய்தால் நாம் சந்தோஷமாக வாழ்வோம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக இப்போது நாம் கவலையே இல்லாமல் வாழலாம் என்று அவர் சொல்லவில்லை. (ஏசா. 66:14) எதிர்காலத்தில் கவலையே இல்லாமல் என்றென்றும் நம்மை வாழ வைக்கப்போகிறார். அந்த வாழ்க்கையைத்தான் எப்போதும் நம் கண்முன் வைக்க வேண்டுமென்று சொல்கிறார். (2 கொ. 4:16-18) அதுவரை, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சேவை செய்ய நமக்கு உதவி செய்கிறார். (புல. 3:22-24) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நமக்குத் திடீரென்று பிரச்சினைகள் வரலாம். ஆனால், நாம் யெகோவாவையே நம்பியிருந்தால் அவர் நிச்சயம் நம்மைக் கைவிட மாட்டார்.—சங். 55:22. w23.04 14-15 ¶3-4

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்