உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நற்செயல்களை தூண்டுவிக்கும் நம் விசுவாசம்
    ராஜ்ய ஊழியம்—2002 | மே
    • நற்செயல்களை தூண்டுவிக்கும் நம் விசுவாசம்

      1 நோவா, மோசே, ராகாப் ஆகியோரை விசுவாசம் செயல்பட தூண்டியது. நோவா பேழையைக் கட்டினார். மோசே, பார்வோனின் அரண்மனை வாழ்க்கை அளித்த தற்காலிக ஆதாயங்களை துறந்தார். ராகாப் வேவுகாரர்களை மறைத்து வைத்தாள்; பின்னர் அவர்களுடைய அறிவுரைப்படி நடந்துகொண்டு குடும்பத்தாரைக் காப்பாற்றினாள். (எபி. 11:7, 24-26, 31) இன்று என்ன நற்செயல்களை செய்ய விசுவாசம் நம்மை தூண்டுவிக்கிறது?

      2 சாட்சி கொடுத்தல்: நம்முடைய அற்புதமான கடவுளையும், நித்திய சந்தோஷத்திற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி பேசுவதற்கு விசுவாசம் நம்மை தூண்டுவிக்கிறது. (2 கொ. 4:13) சில சமயங்களில், நாம் சாட்சி கொடுக்க தயங்கலாம். ஆனால் ‘யெகோவாவை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால்’ நமக்குப் பலமும் கிடைக்கும், பயமும் தணியும். (சங். 16:8) பின்னர் பொருத்தமான எல்லா சந்தர்ப்பத்திலும், நம்முடைய சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தார், சகபணியாளர்கள், பள்ளி தோழர்கள் என எல்லாரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விசுவாசம் நம்மைத் தூண்டுவிக்கும்.​—⁠ரோ. 1:14-16.

      3 கூடிவருதல்: தவறாமல் கூட்டங்களுக்கு வருவது விசுவாசம் பிறப்பிக்கும் மற்றொரு நற்செயல் ஆகும். எப்படி சொல்லலாம்? கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்வது, அங்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வாயிலாக இயேசு நம் மத்தியில் இருக்கிறார் என்ற நம்முடைய உறுதியான நம்பிக்கையை காட்டுகிறது. (மத். 18:20) “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்”பதற்கான நம் ஆசையை அது வெளிக்காட்டுகிறது. (வெளி. 3:6) நமக்குப் போதிக்கிறவர் நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவாவே என்பதை விசுவாசக் கண்களால் காண்பதால், கொடுக்கப்படும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறோம்.​—⁠ஏசா. 30:20, NW.

      4 நாம் செய்யும் தெரிவு: காணக்கூடாத மெய்மைகளின் பேரிலான அசைக்க முடியாத நம்பிக்கை, வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நம்மைத் தூண்டுவிக்கிறது. (எபி. 11:1) இது பெரும்பாலும் பொருள் சம்பந்தமான தியாகங்கள் செய்வதை உட்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு மூப்பர் தனக்குக் கிடைத்த அருமையான பதவி உயர்வை வேண்டாம் என நிராகரித்தார்; ஏனெனில் அந்த பதவி உயர்வுக்காக சில கூட்டங்களைத் தவறவிடவும், குடும்பத்தாரிடமிருந்து விலகி இருக்கவும், பயனியர் ஊழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர் விரும்பவில்லை. அதே போல நாமும், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [“தொடர்ந்து,” NW] தேடு”பவர்களை யெகோவா கவனித்துக்கொள்வார் என பைபிள் தரும் உறுதியில் முழு நம்பிக்கை வைப்போமாக.​—⁠மத். 6:33.

      5 விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் செலுத்தும் பலமான செல்வாக்கு மற்றவர்களுடைய கண்களிலிருந்து தப்பாது. நமக்குள்ள விசுவாசம் உலகறிந்த உண்மை. (ரோ. 1:8) எனவே நாம் அனைவரும் நற்செயல்கள் மூலம் நம்முடைய விசுவாசம் உயிருள்ளது என்பதை காட்டுவோமாக.​—⁠யாக். 2:26.

  • பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்துகிறீர்களா?
    ராஜ்ய ஊழியம்—2002 | மே
    • பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்துகிறீர்களா?

      1 பயன்படுத்தும்படி சொல்லப்பட்ட பிரசுரங்களில் ஒன்றை உபயோகித்து, ஆர்வம் காட்டுகிறவருடன் தவறாமலும், கிரமமாகவும் பைபிள் கலந்தாலோசிப்புகளை நடத்தினால், அது சுருக்கமானதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்துகிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா? வாசலில் வைத்தோ, தொலைபேசியிலோ எப்படி கலந்தாலோசித்தாலும் அது பைபிள் படிப்புதான். அப்படிப்பட்ட படிப்பை தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தி மே, ஜூன் மாதங்களில் ஆரம்பிக்க ஏன் விசேஷ முயற்சி எடுக்கக்கூடாது?

      2 வெற்றி பெறுவதற்கு தயாரியுங்கள்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிக்கையில் எதை கலந்தாலோசிக்கப் போகிறீர்கள் என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் முதல் சந்திப்பில் கலந்தாலோசித்த விஷயத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ‘கலந்தாலோசிப்பு தொடருவதற்கும் அது பைபிள் படிப்பாக மாறுவதற்கும் சிற்றேட்டில் எந்த பாராக்களிடம் நான் முக்கியமாக கவனத்தை திருப்ப வேண்டும்?’ என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் இளைஞர், பெரியவர், ஆண், பெண் ஆகியோரிடம் என்ன பொருள்களைப் பற்றி பேசுவது ஆர்வத்தைத் தூண்டும் என யோசியுங்கள். சிற்றேட்டின் தலைப்புகளை கண்ணோட்டம் விட்டு ஆர்வத்தைத் தூண்டும் பொருளைத் தேர்ந்தெடுங்கள். எப்படி பேசுவது என தீர்மானித்த பின்பு அதைப் பல முறை பயிற்சி செய்து பாருங்கள். இது வெற்றிக்கு ஒரு வழியாகும்.

      3 ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில், “தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிப்பதற்கான ஆலோசனைகள்” பகுதியில் எட்டு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிற்றேட்டை உபயோகித்து படிப்புகளை ஆரம்பிக்கும் விதத்தை “நேரடி அணுகுமுறை” என்ற பெட்டி காட்டுகிறது. முதல் ஆலோசனையை நீங்கள் இவ்வாறு உபயோகிக்கலாம்:

      ◼ “சில நிமிடங்களுக்குள்ளாக ஒரு முக்கிய பைபிள் கேள்விக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியுமா? உதாரணமாக, கிறிஸ்தவம் என சொல்லிக் கொள்ளும் பல மதங்கள் இன்று இருப்பது ஏன்? எப்போதாவது இதைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?” வீட்டுக்காரர் பதில் சொன்ன பின்பு, பாடம் 13-⁠க்குத் திருப்பி முதல் இரண்டு பாராக்களை கலந்தாலோசியுங்கள். நேரம் இருந்தால் ஓரிரு வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் கடைசி கேள்வியை வாசித்துவிட்டு இவ்வாறு சொல்லுங்கள்: “உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொள்ள உதவும் ஐந்து குறிப்புகளை மீதமுள்ள பாடம் சிறப்பித்துக் காட்டுகிறது. மீண்டும் வந்து இவற்றை உங்களுடன் கலந்தாலோசிக்க விரும்புகிறேன்.”

      4 விடாமுயற்சியுடன் இருங்கள்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்தும் முறையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து காட்ட தவறாதீர்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு ஜெபியுங்கள். (மத். 21:22) விடாமுயற்சியுடன் ஊழியத்தில் ஈடுபடுகையில் நற்செய்திக்கு செவிசாய்க்கும் ஒருவருக்கு உதவும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்