-
எபிரெயர் 6:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஒருசமயம் அறிவொளியைப் பெற்றும்,+ பரலோக அன்பளிப்பை* ருசிபார்த்தும், கடவுளுடைய சக்தியைப் பெற்றும், 5 கடவுளுடைய நல்ல வார்த்தையைச் சுவைத்தும், வரப்போகிற உலகத்தின்* வல்லமையான காரியங்களை ருசித்தும் 6 விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள்,+ கடவுளுடைய மகனைத் தாங்களே மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடித்து வெளிப்படையாக அவரை அவமானப்படுத்துகிறார்கள்.+ அதனால், அவர்களுடைய புத்தியைத் தெளிய வைத்து அவர்களைத் திருத்துவது முடியாத காரியம்.
-
-
1 யோவான் 5:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 மரணத்துக்கு வழிநடத்தாத ஒரு பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவர் பார்த்துவிட்டால், அவர் அவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வார். கடவுள் அவனுக்கு வாழ்வு கொடுப்பார்.*+ ஆம், மரணத்துக்கு வழிநடத்தாத பாவத்தைச்+ செய்தவர்களுக்குத்தான் அது பொருந்தும். மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம் இருக்கிறது. அப்படிப்பட்ட பாவத்தைச் செய்கிறவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி நான் அவரிடம் சொல்லவில்லை.
-